பெருந்தன்மை பன்முக தமிழ் ஆய்வு இதழ் (Perunthanmai Multidisciplinary Tamil Studies Journal - PMTS Journal) வரும் இதழ்களுக்காக ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் அறிஞர்களிடமிருந்து அசல் ஆய்வுக் கட்டுரைகள், மதிப்பாய்வுக் கட்டுரைகள் மற்றும் நூல் மதிப்புரைகளை விருப்பத்துடன் அழைக்கிறது.
| இதழ் | கட்டுரை சமர்ப்பிப்புக் காலம் | இறுதி சமர்ப்பிப்புக் கால அவசர தேதி | வெளியீட்டு தேதி |
|---|---|---|---|
| மார்ச் | ஜனாவரி 1 - பிப்ரவரி 15 | பிப்ரவரி 15 | மார்ச் 1 |
| ஜூன் | ஏப்ரல் 1 - மே 15 | மே 15 | ஜூன் 1 |
| செப்டம்பர் | ஜூலை 1 - ஆகஸ்ட் 15 | ஆகஸ்ட் 15 | செப்டம்பர் 1 |
| டிசம்பர் | அக்டோபர் 1 - நவம்பர் 15 | நவம்பர் 15 | டிசம்பர் 1 |
பெருந்தன்மை பன்முக தமிழ் ஆய்வு இதழானது, தமிழ் மொழி, இலக்கியம், கலாச்சாரம், வரலாறு மற்றும் சமூக அறிவியல் போன்ற பல்வேறு துறைகளில் அசல் ஆய்வுகளை வெளியிடுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு காலாண்டு இதழாகும். இது பன்முகத் தமிழாய்வை ஊக்குவித்து, அறிவார்ந்த விவாதங்களை வளர்த்தெடுத்து, ஆய்வாளர்கள் தங்களின் கண்ணோட்டங்கள், முடிவுகள் மற்றும் பார்வைகளை பகிர்ந்துகொள்ளும் ஒரு தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாறு, தமிழ் அறிவும் கலாச்சாரமும் வளர்ச்சியடைவதற்கும் செழுமை பெறுவதற்கும் இது ஒரு கட்டமாகத் தொண்டாற்றுகிறது.
கட்டுரை சமர்ப்பிப்பு வழிகாட்டுகள்
பெருந்தன்மை பன்முகத் தமிழாய்விதழில் (PMTS Journals) வெளியிடுவதற்காகத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அசல் ஆய்வுக் கட்டுரைகளை வரவேற்கிறோம். கட்டுரைகள் யுனிகோட் எழுத்துருவில் (லதா அல்லது பாமினி) தயாரிக்கப்பட்டு, A4 அளவில் 3 பக்கங்களுக்கு குறையாமல் 5 பக்கங்களுக்கு மிகாமல், எழுத்து அளவு 12 மற்றும் வரி இடைவெளி 1.15 ஆக இருக்க வேண்டும்.
சமர்ப்பிப்பு நடைமுறை
- கட்டுரைகளை விரைவாக பரிசீலிக்க poetpublication@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
- முதல் பக்கத்தில் ஆசிரியர் விவரங்களை (பெயர், முகவரி, பணியிடம், கைப்பேசி எண், மின்னஞ்சல்) சேர்க்கவும்.
- முனைவர் பட்ட ஆய்வாளர்கள் சமர்ப்பிப்பதற்கு முன்பு தங்கள் வழிகாட்டியரின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும்.
வெளியீட்டு நெறிமுறைகள்
- கட்டுரைகள் இதற்கு முன் எங்கும் வெளியிடப்படாதவையாக இருக்க வேண்டும்.
- ஒரே நேரத்தில் பல இதழ்களுக்குச் சமர்ப்பிக்கக் கூடாது.
- வெளியீட்டிற்கு முன் ஒரு பதிப்புரிமை அறிவிப்புப் படிவம் பெறப்படும்.
- முதன்மை ஆசிரியரின் முடிவே இறுதியானதாகும்.
வெளியீட்டு கால அட்டவணை
- பெருந்தன்மை பன்முகத் தமிழாய்விதழ் (PMTS Journals) காலாண்டு இதழாக மார்ச், ஜூன், செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெளியிடப்படுகிறது.
சமர்ப்பிப்பு மற்றும் அறிவிப்புகள் - கட்டுரைகள் ஆண்டு முழுவதும் ஏற்கப்படுகின்றன.
- ஏற்புச் சீட்டுகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
- ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டுரைகளின் வெளியீட்டுக் காலக்குறிப்பு தொடர்பாக ஆசிரியர்களுக்குத் தனியாகத் தகவல் அளிக்கப்படும்.
பதிப்புரிமை
கட்டுரை தேர்வு செய்யப்பட்டால் உங்களுடைய மின்னஞ்சலுக்கு ஒப்பந்தப் படிவம் அனுப்பிவைக்கப்படும். ஒப்பந்தவடிவம் பெறப்பட்ட பிறகே உங்கள் கட்டுரை வெளியிடப்படும்.